எதிர்க் கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் ஒரு கண்ணீர் வேண்டுகோள்....!

எதிர்க் கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் ஒரு கண்ணீர் வேண்டுகோள்....!

டாஸ்மாக் திறந்தபோது அதனால் கொரோனா பறவிய செய்தி கேட்கவில்லை.

அரசியல் கட்சி கூட்டம் நடந்த போது அதனால் கொரோனா பறவிய செய்தி கேட்கவில்லை.

ஷாப்பிங் மால் திறந்தபோது அதனால் கொரோனா பறவிய செய்தி கேட்கவில்லை.

தியேட்டர் திறந்தபோது அதனால் கொரோனா பறவிய செய்தி கேட்கவில்லை.

ஆனால் பள்ளி திறக்கும் போது மட்டும் பாருங்கள். இத்தனை ஆசிரியர்களுக்கு கொரோனா வந்தது, இத்தனை மாணவர்களுக்கு வந்தது என்கிற தலைப்புச் செய்திகளும் தலையங்கப் பத்திரிக்கையும் உலாவரும்.

உங்களின் கீழ்த்தர அரசியல் வீதி உலா வரும்.

நாங்கள் என்ன பாவம் செய்தோம். 

மாதா, பிதா, குரு என மூன்றாவது இடத்தில் இருந்தோம். இன்றோ முச்சந்தியில் கண்ணீரில் தத்தளிக்கின்றோம்.

உங்களின் அரசியல் பிழைப்பிற்காக எங்களை மீண்டும் கண்ணீரில் மூழ்க விடாதீர்கள்.

நாங்கள் பிழைத்துக் கொள்ள கடைசி வாய்ப்பு அதிலும் மண்ணை அள்ளி வீசாதீர்கள்.

பள்ளிகளைத் திறந்து எங்களைக் காப்பாற்றுங்கள்.

தயவுசெய்து எதிர்க்கட்சிகளும், ஊடக, தொலைக்காட்சிகளும் எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்.


உங்கள் பாதத்தில் எங்கள் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்.


கண்ணீருடன் 😭😭😭

தனியார் பள்ளி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தார்கள்.