சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள் மாணவர்கள் பங்கேற்கத் தேவையில்லை
சுதந்திர தினத்தை ஒட்டி, கலை நிகழ்ச்சிகள் பள்ளி மாணவர்கள் பங்கேற்கத் தேவையில்லை என்று பொதுத் துறை முதன்மைச் செயலாளர் பி செந்தில்குமார் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விவரம்
நாட்டின் சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த விழாவில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு தனது கடிதத்தின் வாயிலாகத் தெரிவித் துள்ளது.
எனவே, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதை போன்ற
நிகழ்வுகளை மாவட்டங்களில் நடத்துவது சிரமமான காரியமாகும்.
இதைக் கருத்தில் கொண்டு காவல் துறையினர் மரியாதையை மட்டும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிகழ்வை நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. பள்ளி மாணவர்களை வைத்து வழக்கமாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.