பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு...! கல்வித்துறை விரைவில் வெளியிடுகிறது....!!


பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு...! கல்வித்துறை விரைவில் வெளியிடுகிறது....!!




தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்டு அனுப்பவேண்டும் என்று மத்திய கல்வித்துறை அனைத்து மாநில முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. இதன் பேரில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பதாக தெரிகிறது. பெரும்பாலான பெற்றோர்க்ள் பள்ளிகள் எப்படா திறக்கும் கழியும் என்று பள்ளி திறக்கும் நாளை ஆவலோடு எதிா்பாா்த்து காத்துள்ளனா்.

 

அரசு தற்போது இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், தொடக்க பள்ளிகள் முதல் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகிப்பது தொடர்கிறது.

 

அரசுப் பள்ளிகளில் புத்தகம் விநியோகிப்பதை பாா்த்த தனியாா் பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் உங்கள் பள்ளியை எப்போது தொடங்க உள்ளீா்கள் பாடப்புத்தகங்களை எப்போது கொடுப்பீா்கள் என்று கேட்கத் தொடங்கியுள்ளனா்.

 

இந்நிலையில், பள்ளிகளில் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்றும், குடிநீர், கழிப்பிட வசதிகளை சரியாக செய்யவேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதன் பேரில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. இந்த ஏற்பாடுகளை பார்க்கும் போதுவிரைவில் பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பு வரலாம் என்று கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

அரசின் இந்த அறிவிப்பு ஒரு கண்ணிற்கு வெண்ணையும் இன்னொரு கண்ணிற்கு சுண்ணாம்பும் வைப்பது போல் உள்ளது. இந்த அறிவிப்பை தனியாா் பள்ளிகளுக்கும் சோ்த்து  செய்ய வேண்டியது தானே...?

 

தனியாா் பள்ளிகளும் அப்பள்ளிகளில் படிக்கும் மாணவா்களும் அரசுக்கு என்ன துரோகம் செய்துள்ளனா்....? ஏன் இந்த ஓர வஞ்சனை என்று அனைவரும் கேட்கத் துவங்கியுள்ளனா்.