நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடைக்கால உத்தரவு.. முக்கிய சாராம்சம்.....

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடைக்கால உத்தரவு.. முக்கிய சாராம்சம்....


கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது


மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்து வந்தாலும், ஒவ்வொரு நாளும் புதிய கோணத்தில் கொரோனா தொடர்கிறது


இதன் தாக்கம் எப்போது குறையும் தெரியாத நிலையில் உள்ளது.


அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் இந்த வழக்குகளை தொடர்ந்துள்ளது.


எனவே அரசு அவர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து உரிய முடிவை எடுக்க வேண்டும்.


கல்வி நிறுவனங்கள் செயல்பட தொடங்கினால்தான், உதவி பெறாதவை செயல்பட முடியும் என கல்வி நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்படுகிறது.


அதேநேரத்தில் கட்டணம் செலுத்தக்கூடிய நிலைமையில் இல்லை என்ற பெற்றோர் தரப்பில் சொல்லப்படுகிறது.


மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது.


கல்லூரிகளுக்கு 3 தவணைகளிலும், பள்ளிகளுக்கு 75 % கட்டணத்தையும் வசூலிக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.


25% முதல் தவணையை இப்போதும் மற்றும் 25% இரண்டாம் தவணை தலா பள்ளிகள் திறக்கும்போது வசூலிக்கலாம் என அரசு சொல்கிறது. ஆனால், பள்ளிகள் எப்போது திறக்கும் என தெரியாத நிலையில் உள்ளது.


அதனால், அரசு உதவி பெறாத அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் 2020-21 முதல் தவணையை 25%க்கு பதிலாக 40%ஆம் ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்கலாம்.


மீதமுள்ள 60% சதவீதத்தை வசூலிப்பது குறித்து சூழ்நிலையை பொறுத்து பின்னர் முடிவெடுக்கலாம்


இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அரசு உதவிபெறாத அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் (கல்லூரி + பள்ளி) பொருந்தும்


கட்டண நிர்ணய குழு கட்டண நிர்ணய நடைமுறையை துவங்கி ஆக்ஸ்டில் இருந்து 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.


இந்த ஆண்டு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரகூடாது


பாட புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைவான கட்டணத்திலோ வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்.


வழக்கு 5 அக்டோபர் 2020 ஒத்திவைப்பு