+2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...... வெற்றி பெற்றவா்களுக்கு மத்திய அமைச்சா் வழங்கும் விருதுகள்......

+2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்......


தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி 100% பள்ளி அளவில் பாட அளவில் தேர்ச்சி பெற்று தனியார் பள்ளிகளுக்கு பெருமை சேர்த்த என் உயிரினும் மேலான பள்ளி நிர்வாகிகள் ஆசிரிய பெருமக்கள் மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


+2 முடித்து உயர்கல்விக்குச் செல்லும்  என் உயிரினும் மேலான மாணவ கண்மணிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களோடு.......


அவர்கள் உயர் கல்வி தொடர தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் ஒரு பைசா கூட நன்கொடை இல்லாமல் அவர்கள் விரும்புகிற கல்லூரியில் சேர்ப்பதற்கு பரிந்துரை செய்கின்றோம்....


மாணவக் கண்மணிகள் பெரும் தொகையையும் நன்கொடையையும் கொடுத்து ஏமாறாமல் படித்து முடித்து கல்லூரி பல்கலைக் கழகத்தை விட்டு வெளியே வரும்போதே நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக்கான ஆணையும் வழங்கப்படும்.


உங்கள் பள்ளியில் 100% வெற்றி பெற உழைத்த நல்லாசிரியர் எங்களுக்கு பள்ளி திறந்தவுடன் நல்லாசிரியர் விருதும்...


சிறந்த பள்ளிக்கான விருதும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில்  இந்தியப் பேரரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு ரமேஷ் போக்ரியால் அவர்கள் விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.


நல்ல பள்ளிகள் உங்கள் பள்ளியின் நல்லாசிரியரை தேர்வு செய்து நமது மாநிலச் சங்கத்திற்கு அனுப்பினால் 100% மாபெரும் விருதை உங்களுக்கு வழங்குகின்றோம்.


உங்கள் பள்ளியின் பெயரும் புகழும் உங்கள் நலவாழ்வும் பெருவாழ்வும் ஓங்கி உயர்ந்து ஒளிவீசிட நமது சங்கம் உங்களுக்கு கலங்கரை விளக்காய் இருந்து நல்வழி காட்ட காத்திருக்கிறோம். 


வாருங்கள் அசாத்தியமான வைகளை சாத்தியம் ஆக்குவோம் என்று வணங்கி வரவேற்கின்றோம்.....


என்றும் கல்வி பணியில் உங்கள்
 கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.