நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு  2018. - 19 ஆம் ஆண்டுக்கான ஆர்.டி.இ கல்வி கட்டண பாக்கி 40% உடனே வழங்கு. அரசுக்கு கோாிக்கை

நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு  2018 - 19 ஆம் ஆண்டுக்கான ஆர்.டி.இ கல்வி கட்டண பாக்கி 40% உடனே வழங்கு. அரசுக்கு கோாிக்கை


நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு  2018.. 19 ஆம் ஆண்டுக்கான ஆர்.டி.இ கல்வி கட்டண பாக்கி 40% உடனே வழங்க கோரி கோரிக்கை விண்ணப்பத்தை அனைத்து நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகளும் உடனடியாக தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டும் 
என அன்போடு வேண்டுகின்றோம்.
 இது மிக அவசரம் நீங்கள் அனுப்பாமல் இருந்துவிட்டு நாளைக்கு பணம் வரவில்லை என்று  ஏங்க வேண்டாம்.கோரிக்கை மனு அனுப்புபவர் அதற்கு மட்டும் தான் பணம் கிடைக்கும் மற்றவர்கள் கிடைக்காது என்பதை புரிந்து கொள்ளுங்க


அனுப்புதல்... 
கே ஆர் நந்தகுமார்.
மாநில பொதுச் செயலாளர். தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம். எண்.6. ஏகாம்பரம் தெரு.
 பம்மல் ..சென்னை 75


பெறுதல்.....
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழ்நாடு அரசு
 புனித ஜார்ஜ் கோட்டை
சென்னை-9


வழி... மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 


உயர்திரு ...பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள்


உயர்திரு.. ஆணையாளர் அவர்கள் 
உயர்திரு ..திட்ட இயக்குனர் அவர்கள் அனைவருக்கும் கல்வி இயக்ககம்


உயர்திரு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள்.


பொருள்.....


நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு 2018.. 19 ஆம் ஆண்டு ஆர்.டி.இ கல்வி கட்டண பாக்கி 40% மற்றும் 2019... 20 ஆம் ஆண்டுக்குரிய கல்வி கட்டண பாக்கி 100 சதவீதம் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்கக்கோரி வேண்டுதல் விண்ணப்பம்....


ஐயா ....வணக்கம்..
கொரோனா நோய்தொற்று தமிழகமக்களை தொட்டு விடாமலிருக்க தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள தமிழக அரசின் ஆற்றல்மிகு சுகாதார மேம்பாட்டுப் பணிகளை உளப்பூர்வமாக பாராட்டுகின்றோம்.


இவ்வேளையில் மார்ச் 17 ஆம் தேதி முதல் தமிழக தனியார் மற்றும் அரசு பள்ளிகள் இயங்காமல் கல்வி கோவில்கள் மூடியிருக்கிறது. 


ஊரடங்கு முடிந்த பின்பும் பள்ளி கல்லூரிகளை தவிர எல்லாம் இயங்கும் இந்தச் சூழலில் பள்ளிகள் மட்டும் திறக்காமல் புதிய பழைய மாணவர்களை சேர்க்காமல் புதிய பழைய கல்வி கட்டணத்தை வசூலிக்காமல் ஆசிரியருக்கு 
சம்பளம் தர முடியாமல் மின்கட்டணம் பி.எஃப் பள்ளி வாகனங்களுக்கான
இன்சூரன்ஸ்,சாலை வரி , இருக்கை வரி கட்ட முடியாமல் F.C. செய்ய முடியாமல்... வாங்கிய கடனுக்கு வட்டியும் தவணையும் கட்ட முடியாமல் தத்தளித்து வருகின்றோம்.


எல்லாத் துறைக்கும் நலவாரியம் உள்ளது எங்கள் அப்பாவி ஆசிரிய பெருமக்களுக்கு எந்த நல வாரியமும் இல்லை. ஒரு பைசா உதவியும் அரசிடமிருந்து கிடைக்கவில்லை. எங்களாலும் சம்பளம் தொடர்ந்து வழங்க முடியவில்லை. நாங்கள் கற்பிப்பதற்கான நியாயமானகல்வி கட்டணம் எங்களுக்கு கிடைக்கவில்லை. பெற்றோர்களும் கல்வி கட்டணத்தை செலுத்த வில்லை. அதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்
கின்றோம்.


எப்பொழுது பள்ளியை திறப்போம் என்று தெரியாத இந்தச் சூழ்நிலையில். நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25% மாணவர்களை சேர்த்திட்ட வகையில் எங்களுக்கு அரசு தர வேண்டிய கல்வி கட்டண பாக்கியை இன்னும் நிலுவையில் உள்ளது.மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மட்டும் அரசு நிர்ணயித்த முழுமையான கட்டணத்தை சென்னை மாவட்டத்திற்கு நேற்று வழங்கியமைக்காக நன்றி பாராட்டுகின்றோம்.


அதேவேளையில் மிகக் குறைந்த கட்டணத்தை பெற்று பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஆரம்பக்கல்வியின் அடித்தளம் தொடக்கக் கல்வியின் தொழுஉரம் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு 2018.. 19 ஆம் ஆண்டுக்கு தர வேண்டிய கல்வி கட்டண பாக்கி இன்னும் 40% நிலுவையில் உள்ளது. அது மட்டுமல்ல 2019...20 ஆம் ஆண்டுக்குரிய கல்வி கட்டண பாக்கியை 100% அப்படியே நிலுவையில் உள்ளது.


அதை உடனடியாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் வழங்கினால் மட்டும் தான் எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் தந்தாவது அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். 


புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இன்னபிற தமிழக மக்களுக்கும் ஏன் தமிழகத்தில் பிளஸ் 2 முடித்த ஐந்தரை லட்சம் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி பெற்றிட நிவாரணமாக ரூபாய் 2000 கூட இன்று வழங்கியுள்ள தமிழக அரசு... படித்து முடித்து பட்டம் பெற்று வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தனியார் பள்ளியில் பணிபுரியும் திறமை வாய்ந்த நல்லாசிரிய சகோதர சகோதரிகளுக்கு அரசு வேலை கிடைக்கும் வரை தனியார் பள்ளி ஆசிரியர் நல வாரியம் அமைத்து நிவாரணம் வழங்கலாம் ...அவர்கள் வாழ்வாதாரம் பாது காப்பதற்காகவாவது நிலுவையிலுள்ள கல்வி கட்டணத்தை உடனே வழங்குங்கள்.


எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ஆர்.டி.இ கல்வி கட்டண பாக்கியை உடனே வழங்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் பள்ளி கல்வி அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனே இப்பிரச்சினையில் தலையிட்டு எங்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். 


இல்லையென்றால் பல பள்ளி நிர்வாகிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான சூழ்நிலை உள்ளதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.


அருள்கூர்ந்து காலம் தாழ்த்தாமல் உடனே இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய பரிகாரம் காண வேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றோம். 


நன்றியுடன் உண்மையுள்ள 
கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர் 


சென்னை. 75  
நாள் .. 20 .06. 2020