தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவங்களான பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஜூன் மாதம் 1 தேதி முதல் 10 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் என சமீபத்தில் தேர்விற்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வு மையங்கள் தயார் செய்யும் பணிகளும் முழு வீச்சில் நடைபெறுகிறது.மாணவர்களுக்கு தேர்விற்கு செல்வதற்கான பேருந்துகள் அவர்களுக்கான பாதுகாப்பு ஆகியவை குறித்தும் ஆயத்த பணிகள் நடந்து கொண்டுள்ளது.
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதுவோர்க்கான ஹால் டிக்கெட் 18 ஆம் தேதிக்கு பிறகு வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.